குணமடைவோர் விகிதம் 4.5 சதவீதம் உயர்வு: மத்திய அரசு
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 4.51 சதவீதம் உயர்ந்து, 47.40 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 4.51 சதவீதம் உயர்ந்து, 47.40 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,264 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 4 சதவீதம் அதிகரித்து 47.40 சதவீதமாக உள்ளது. மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 89,987-லிருந்து 86,422 ஆக குறைந்துள்ளது.
இந்தியா:
மொத்தம் பாதித்தோர்: 1,74,355
மொத்தம் பலியானோர்: 4,971
மொத்தம் குணமடைந்தோர்: 82,369