கரோனா: ஆந்திரம், அசாம், உத்தரகண்ட், உ.பி நிலவரம்
ஆந்திரப் பிரதேசம், அசாம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திரப் பிரதேசம், அசாம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திரப் பிரதேசம்:
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,042 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
அசாம்:
அசாமில் இன்றைக்கு (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது. இதில் 163 பேர் குணமடைந்துள்ளனர். 1,102 பேர் சிகிச்சையில் உள்ளனர், 4 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரகண்ட்:
உத்தரகண்டில் இன்று புதிதாக 53 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 802 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசம்:
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 262 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,709 பேர் குணமடைந்துள்ளனர். 2,901 பேர் சிகிச்சையில் உள்ளனர். பலி எண்ணிக்கை 213 ஆக உள்ளது.