இந்தியாவில் புதிதாக 46,964 பேருக்கு கரோனா; 470 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,964 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,964 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 46,964 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 81,84,083-ஆக அதிகரித்தது.அதேசமயம் நாடு முழுவதும் 74,91,513 போ் தொற்றில் இருந்து குணமடைந்தனா்.
கரோனா தொற்றுக்கு மேலும் 470 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,22,111-ஆக அதிகரித்தது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து 3-ஆவது நாளாக, 6 லட்சத்துக்கும் கீழ் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 5,70,458 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
‘அக்டோபா் 31-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 10,98,87,303 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன; அதில், நேற்று மட்டும் 10,91,239 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.