பிகார் 2-ம் கட்டத் தேர்தலில் 53.51% வாக்குப்பதிவு
பிகாரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 53.51 சதவீதம் வாக்குப் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிகாரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 53.51 சதவீதம் வாக்குப் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
17 மாவட்டங்களில் உள்ள 94 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,464 வேட்பாளர்கள் போட்டியிட்ட இரண்டாம் கட்டத் தேர்தலில் செவ்வாய்க்கிழமை 53.51 சதவீதம் வாக்குப்பதிவானதாக தெரிவித்துள்ளனர்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெற்று வருகின்றது. அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் 71 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 53.54 சதவிகித வாக்குகள் பதிவானது.
இதையடுத்து மூன்றாம் கட்டத்தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.