முகப்பு
இந்தியா

இந்தியா வந்தடைந்தது 3 ரஃபேல் விமானங்கள்

சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய விமானப் படையை மேலும் பலப்படுத்தும் வகையில் மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று (புதன்கிழமை) இரவு இந்தியா வந்தடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
ரஃபேல் போர் விமானம்
பகிர்:


சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய விமானப் படையை மேலும் பலப்படுத்தும் வகையில் மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று (புதன்கிழமை) இரவு இந்தியா வந்தடைந்தது.

இந்த விமானங்கள் பிரான்ஸிலிருந்து இன்று காலை புறப்பட்டு எங்கேயும் நிற்காமல் இரவு 8.14 மணிக்கு இந்தியா வந்தடைந்ததாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக ஜூலை 28-இல் 5 விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. அவை இந்திய விமானப் படையில் செப்டம்பர் 10-ம் தேதி அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.ஏற்கெனவே வந்தடைந்த 5 ரஃபேல் போர் விமானங்கள் குறுகிய காலகட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்து, பதற்றமான சூழல் நிலவி வரும் லடாக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது வந்த 3 போர் விமானங்களும், விமானப் படையில் இணைக்கப்பட்டு 8 ரஃபேல் போர் விமானங்களாக உயர்ந்துள்ளது.

2016-இல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கையெழுத்திட்ட ரூ. 60,000 கோடி ஒப்பந்தத்தின்படி, 2022 மத்தியில் மொத்தம் 36 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடையும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.