முகப்பு
இந்தியா

'காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியால் ஜனநாயகத்திற்குத் தலைக்குனிவு'

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் ஜனநாயகத்திற்கு மீண்டும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
பகிர்:

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் ஜனநாயகத்திற்கு மீண்டும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

கட்டட உட்புற வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக ஊடகவியலாளரும், தனியார் தொலைகாட்சியின் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

கட்டட உற்புற வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக கடந்த 2019-ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த வழக்கை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் மும்பை காவல்துறையினர் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, '' காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணியும் ஜனநாயகத்தை மீண்டும் தலைகுனியச் செய்துள்ளனர். ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் அதன் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக அரச அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது தனிநபர் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது அவசரநிலையை நமக்கு நினைவூட்டுகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →