அருணாசலில் 32 பாதுகாப்புப்படை வீரர்களுக்கு கரோனா
அருணாசலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 32 பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 97 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
அருணாசலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 32 பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 97 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அருணாசலிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக அருணாசல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
இதில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த 20 பேருக்கும், அசாம் ரைபில் ஜவான்கள் இருவருக்கும், இரண்டு ராணுவத்தினருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பிகார் தேர்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு திரும்பிய இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த வீரர்களில் சிலருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
புதிதாக 85 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 14,051-ஆக அதிகரித்துள்ளது. 1,484 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக அதிகரித்துள்ளது.