தெலங்கானாவில் குணமடைந்தோர் விகிதம் 92.34 ஆக உயர்வு
தெலங்கானாவில் இன்று புதிதாக 1,196 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 2,53 லட்சமாக உயர்ந்துள்ளது.
தெலங்கானாவில் இன்று புதிதாக 1,196 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 2,53 லட்சமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தெலங்கானாவில் இன்றைய பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று தெலங்கானாவில் புதிதாக 1,196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதித்து 5 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 1,390 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தொற்று பாதித்து நோயிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 92.34 சதவீதமாக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 18,027 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேசமயம் இறப்பு விகிதம் 0.54 ஆகும்.
நவம்பர் 10-ம் தேதி மட்டும் 44,635 கரோனா பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், இதுவரை மொத்தம் 47.29