ஆதரவளித்த மோடிக்கு நன்றி: நிதீஷ் குமார்
பிகார் பேரவைத் தேர்தலில் ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தலைவருமான (ஜேடியு) நிதீஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
பிகார் பேரவைத் தேர்தலில் ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தலைவருமான (ஜேடியு) நிதீஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
243 பேரவைத் தொகுதிகள் கொண்ட பிகாரில் ஜேடியு, பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மகா கூட்டணி 110 இடங்களிலும், பிற கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 74 இடங்களிலும், ஜேடியூ 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த வெற்றி குறித்து நிதீஷ் குமார் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை அளித்த மக்களுக்கு வணக்கங்கள். ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி."