தெலங்கானாவில் இன்று புதிதாக 1,015 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 2.54 லட்சமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தெலங்கானாவில் இன்றைய பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று தெலங்கானாவில் புதிதாக 1,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதித்து 3 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 1,393 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், ஒரேநாளில் தொற்று பாதித்து நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,716 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மீட்பு விகிதம் விகிதம் 92.65 சதவீதமாக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 17,323 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 40,603 கரோனா பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், இதுவரை மொத்தம் 47.70 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.