இந்தியா

கரோனாவிலிருந்து குணமடைந்தார் ஸ்மிருதி இரானி

DIN

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொற்றிலிருந்து குணமடைந்தார்.

கரோனாவிலிருந்து குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி கடந்த மாதம் 28-ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். 

பிகார் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், தம்மை நேரில் சந்தித்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று சுட்டுரையில் அறிவுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில் தற்போது அவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''கரோனா பரிசோதனையில் 'நெகடிவ்' என வந்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து குணமடைய வேண்டும் என்று வாழ்த்திய மற்றும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT