மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம்: முதியவர் பலி
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலியானார்.
வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மரச்சத்திரம், குப்புச்சிபாறையைச் சேர்ந்தவர் காளியப்பன் (60). இவர் தற்போது திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் தங்கியிருந்து கூலி வேலைக்குச் சென்று வந்தார். சனிக்கிழமையன்று இவர் வெள்ளக்கோவில் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நடேசன் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெள்ளக்கோவில் காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.