முகப்பு
இந்தியா

பிகாரில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் நிதீஷ் குமார்

பிகாரில் ஆட்சியமைப்பதற்காக ஆளுநர் பிகு செளஹானிடம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதீஷ் குமார் உரிமை கோரினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
பிகாரில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் நிதீஷ் குமார் (கோப்புப்படம்)
பகிர்:

பாட்னா: பிகாரில் ஆட்சியமைப்பதற்காக ஆளுநர் பிகு செளஹானிடம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதீஷ் குமார் உரிமை கோரினார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க. 74 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும் கைப்பற்றியது.

குறைந்த இடங்களை கைப்பற்றியிருந்தாலும், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதீஷ் குமாரே முதல்வராக நீடிப்பார் என்று பாஜக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பிகார் மாநிலம் பாட்னாவில் நிதீஷ் குமார் இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆலோசனையின் இறுதியில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை (ஜே.டி.யு) சேர்ந்த நிதீஷ் குமாரையே மீண்டும் முதல்வராக தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுடனான ஆலோசனையில் பிகார் முதல்வராவது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் பகு செளஹானிடம் ஆட்சியமைக்க நிதீஷ் குமார் உரிமைக் கோரினார்.

முழு கட்டுரையைப் படிக்க →