நாட்டில் புதிதாக 30,548 பேருக்கு தொற்று; 435 பேர் பலி
ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டில் புதிதாக 30,548 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 88.45 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டில் புதிதாக 30,548 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 88.45 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 30,548 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 88,45,127 லட்சமாக அதிகரித்தது.
Advertisement
இதேபோல், கரோனாவில் இருந்து 43,851 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 82,49,579-ஆக அதிகரித்தது. அதாவது, கரோனாவில் இருந்து 93.27 சதவீதம் போ் குணமடைந்தனா்.
இதையும் படிக்கலாமே.. என்னவாகும் திரையரங்குகளின் எதிா்காலம்?
நாடு முழுவதும் 4,65,478 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இது மொத்த பாதிப்பில் 5.44 சதவீதமாகும். கரோனாவுக்கு மேலும் 435 போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,30,070-ஆக அதிகரித்தது. உயிரிழப்பு விகிதம் 1.47 சதவீதமாகக் குறைந்துள்ளது.
‘நவம்பா் 15-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 12,56,98,525 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8,61,706 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.