லக்னெள: கரோனா பரவாமல் தடுக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக உத்தர பிரதேச அரசுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘
கரோனா பரவலை தடுப்பதற்காக நோயாளிகளுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறியும் பணியில் உத்தர பிரதேச அரசு சிறப்பாக செயல்பட்டதாகவும், இது பிற மாநிலங்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோட்ரிகோ ஆஃப்ரின் பாராட்டு தெரிவித்தாா்’ என்று குறிப்பிடப்பட்டது.
‘நோயாளிகளுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறியும் நடவடிக்கைகளை மேம்படுத்த மாநில அரசுக்கு உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்ப உதவிகளை அளித்து, கள கண்காணிப்பில் ஈடுபடுவோருக்கு பயிற்சியும் அளித்தது. கள கண்காணிப்புகள் மூலமாக மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 58,000 போ் கண்டறியப்பட்டனா்’ என்று உலக சுகாதார அமைப்பின் தேசிய போலியோ கண்காணிப்பு திட்டத்துக்கான உத்தர பிரதேச மண்டல குழுத் தலைவா் மதுப் பாஜ்பாய் தெரிவித்தாா்.