முகப்பு
இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: தந்தை, மகன் உள்பட மூவர் பலி 

உத்தரப் பிரதேசத்தின் சம்பால் மாவட்டத்தில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட மூவர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:54 PM
3 killed as motorcycles collide in UP's Sambhal
பகிர்:

சம்பால்: உத்தரப் பிரதேசத்தின் சம்பால் மாவட்டத்தில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட மூவர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குன்னூர் காவல் நிலைய பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்ததாக வட்ட அதிகாரி கே கே சரோஜ் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் குசுமா தேவி (45), அவரது மகன் ராமன் குமார் (22) மற்றும் மற்றொரு நபர் கலு (26) ஆகியோர் உயிரிழந்தனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.