தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 
இந்தியா

மாநில மொழிகளில் போட்டித் தேர்வுகள்: பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கடிதம்

மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளை அந்தந்த மாநில பிராந்திய மொழிகளில் நடத்த வேண்டும் எனக்கோரி பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடிதம் எழுதியுள்ளார்.

DIN

மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளை அந்தந்த மாநில பிராந்திய மொழிகளில் நடத்த வேண்டும் எனக்கோரி பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே, பாதுகாப்பு சேவைகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள பணியிடங்களுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடைபெறுகின்றன.

இந்நிலையில் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் அவர், “இந்தியாவின் அனைத்து மாநில மாணவர்களுக்கும் சமமான மற்றும் நியாயமான வாய்ப்புகளை வழங்குவதற்காக, இந்திய அரசு மற்றும் அதன் துறைகள், யுபிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றுவதற்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளை பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல் ஆயிரம்: பூமியின் வடதுருவ காந்தப்புல நகர்வு வேகம் அதிகரிப்பு! ஏன்?

பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!

2 ஆப்கன் வீரர்கள் சதம்: இந்தியாவுக்கு 311 ரன்கள் இலக்கு!

தேமுதிக கூட்டணி அமைக்க தாமதம் ஏன்? பிரேமலதா பதில்!

அம்மாவுக்கு புது வீடு கட்டி பரிசளித்த நடிகை சோனியா சுரேஷ்!

SCROLL FOR NEXT