உத்தரகண்ட் ஆளுநருக்கு கரோனா தொற்று
உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மௌரியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:26 PM
உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மௌரியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், "கரோனா பரிசோதனையில் எனக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. அறிகுறியற்ற தொற்றால் எந்த பிரச்னையும் இல்லை. மருத்துவர்களின் மேற்பார்வையில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன்.
கடந்த சில நாள்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கையாக இருப்பதோடு நீங்களாகவே பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement