முகப்பு
இந்தியா

தாணேவில் மேலும் 799 பேருக்கு கரோனா: 15 பேர் பலி

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் புதிதாக 799 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,25,613 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் புதிதாக 799 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,25,613 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 5,634 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை, கல்யாண் நகரத்தில் அதிகபட்சமாக 53,175 ஆகவும், தாணே நகரத்தில் 50,446 ஆகவும் மற்றும் நவி மும்பை 47,550 ஆகவும் தொற்று பதிவாகியுள்ளன.

தற்போது வரை, மாவட்டத்தில் 6,995 பேர் மருததுவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் 2,12,984 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தாணே நகரில் கரோனா மீட்பு விகிதம் 94.40 சதவீதுமாக உள்ளது. 

அண்டை நாடான பால்கரைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மாவட்டத்தில் இதுவரை 42,395 பேருக்கு கரோனா தொற்றும், 1,152 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.