சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த வான் டெர் டுசென்!
தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் ஓய்வு அறிவிக்கப்பட்டது குறித்து...
தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் வான் டெர் டுசென் (37 வயது) சர்வதேச போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் 2026-27 சீசனுக்கான ஒப்பந்தப் பட்டியலில் தேர்வாகாததால், தனது ஓய்வு முடிவினை வான் டெர் டுசென் அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியில் 2018ல் அறிமுகமாகிய வான் டெர் டிசென் 18 டெஸ்ட் போட்டிகளில் 905 ரன்கள், 71 ஒருநாள் போட்டிகளில் 2,657 ரன்கள், 57 டி20 போட்டிகளில் 1,406 ரன்களும் எடுத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் சராசரி 50.13ஆக இருக்கிறது. அடுத்தாண்டு ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறும் நிலையில் வான் டெர் டுசெனின் இந்த முடிவு தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சியாளர்கள், தேர்வுக்குழு தலைவர்கள், ரசிகர்கள், தனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த வான் டெர் டுசென், “சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்” எனக் கூறியுள்ளார்.