முகப்பு
இந்தியா

நாட்டில் 8 மாநிலங்களால் மட்டுமே 69% கரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை

நாட்டில் புதிதாக ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பில் 8 மாநிலங்களில் மட்டுமே 69 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 நவம்பர், 2020 at 1:19 PM
நாட்டில் 8 மாநிலங்களால் மட்டுமே 69% கரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

நாட்டில் புதிதாக ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பில் 8 மாநிலங்களில் மட்டுமே 69 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. 

இதனிடையே கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

அதில், நாட்டில் இன்றைய (சனிக்கிழமை) நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 4,54,940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த கரோனா பாதிப்பில் 4.87 சதவிகிதமாகும்.

புதிதாக பதிவாகியுள்ள கரோனா பாதிப்பில் 69.04 சதவிகிதம் 8 மாநிலங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது.  மகாராஷ்டிரம், தில்லி, கேரளம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியாணா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.