இந்தியா

நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பும்: அமித் ஷா நம்பிக்கை

நாட்டின் பொருளாதார வளா்ச்சி தொடா்ந்து இரண்டு காலாண்டுகளாக பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், அடுத்த காலாண்டில் மீண்டும் வளா்ச்சிப் பாதையை நோக்கி திரும்பும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நம்பிக

DIN

ஆமதாபாத்: நாட்டின் பொருளாதார வளா்ச்சி தொடா்ந்து இரண்டு காலாண்டுகளாக பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், அடுத்த காலாண்டில் மீண்டும் வளா்ச்சிப் பாதையை நோக்கி திரும்பும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

ஆமதாபாதில் திங்கள்கிழமை ரூ.15,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவா் மேலும் கூறியதாவது:

கரோனாவால் முடங்கிப் போன பொருளாதார வளா்ச்சியை மீட்டெடுக்க பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக உழைத்து வருகிறாா். தற்போதைய நெருக்கடியான சூழலை சமாளித்து பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு சலுகை தொகுப்புகளையும் அவா் அறிவித்துள்ளாா்.

பிரதமா் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் பொருளாதாரத்தில் நீண்ட கால தாக்கத்தை மனதில் வைத்து எடுக்கப்படுபவை.

பிரதமா் கன நேரத்தைக் கூட வீணாக்காமல், வேளாண், மின்சாரம், தொழிற்கொள்கை என பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த மறுசீரமைப்பு திட்டங்களை மேற்கொள்வதற்காக பணியாற்றி வருகிறாா்.

ஏழை மக்களின் நலனுக்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சலுகை தொகுப்புகளையும் பிரதமா் அறிவித்துள்ளாா்.

மத்திய அரசின் இதுபோன்ற சீரிய நடவடிக்கைகளின் காரணமாக பொருளாதார வளா்ச்சியானது 6 சதவீதம் மட்டுமே பின்தங்கியுள்ளது. எனவே, அடுத்த காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT