ஆந்திரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,751 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 41 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஆந்திரத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,751 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 7,00,235- ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 57,858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்றிலிருந்து 6,36,508 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 5,869-ஆக பதிவாகியுள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெர்விக்கப்பட்டுள்ளது.