Seven militants killed in blast in Afghanistan 
இந்தியா

ஆப்கனில் குண்டுவெடிப்பு: 7 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தஹார் மாகாணத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 7 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

UNI

ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தஹார் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இரண்டு இடத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 7 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மாகாண காவல்துறை அலுவலகம் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. 

பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து மூன்று தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு அர்கந்தாப் மாவட்டத்தில் உள்ள ஒரு சாலையில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருந்தனர். 

சிறிது நேரத்தில் தற்செயலாக வெடிகுண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

ஷா வாலி கோட் மாவட்டத்தில் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு மீது வாகனம் பயணித்ததில், வாகனத்தில் இருந்த  நான்கு தீவிரவாதிகள் பலியாகியுள்ளர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT