ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தஹார் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இரண்டு இடத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 7 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மாகாண காவல்துறை அலுவலகம் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து மூன்று தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு அர்கந்தாப் மாவட்டத்தில் உள்ள ஒரு சாலையில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருந்தனர்.
சிறிது நேரத்தில் தற்செயலாக வெடிகுண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஷா வாலி கோட் மாவட்டத்தில் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு மீது வாகனம் பயணித்ததில், வாகனத்தில் இருந்த நான்கு தீவிரவாதிகள் பலியாகியுள்ளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.