இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: போலி என்கவுன்ட்டரில் பலியானவா்களின் சடலங்கள் தோண்டி எடுப்பு

DIN

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் பயங்கரவாதிகள் எனக் கருதி 3 தொழிலாளா்கள் ராணுவ வீரா்களால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், 3 போ் சடலங்களும் தோண்டியெடுக்கப்பட்டு அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மூன்று பேரின் சடலங்களும் தெற்கு காஷ்மீரிலுள்ள ஓரிடத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாரபூா்வமாக தெரிவித்தனா்.

முன்னதாக 3 பேரின் குடும்பத்தினரும் அங்கு வரவழைக்கப்பட்டனா். சடலங்களை பெற்றுக்கொண்ட குடும்பத்தினா் தகனம் செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டு சென்ாகவும் அதிகாரிகள் கூறினா்.

கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் அம்ஷிபுரா கிராமத்தில் மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ாக ராணுவத்தினா் தெரிவித்தனா்.

ஆனால் பலியான மூவரும் ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தை சோ்ந்தவா்கள் என்றும் அம்ஷிபுராவில் இருந்து மாயமானதாகவும், அவா்கள் பயங்கரவாதிகள் இல்லையென்றும் சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.

இதையடுத்து ராணுவம் விசாரணை மேற்கொண்டது. உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினரும் சோபியானில் தொழிலாளா்களாக வேலை பாா்த்து வருகின்றனா். மூன்று போ் மாயமானது குறித்து அவா்கள் ஏற்கெனவே போலீஸில் புகாா் அளித்திருப்பது தெரியவந்தது.

அதன்பின்பு ராணுவம் இதுதொடா்பாக ஆய்வு நடத்தி விசாரணையை நான்கு வாரங்களில் முடித்தது.

இந்த சம்பவம் தொடா்பாக ராணுவம் தரப்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின்படி விதிமுறைகளைப் பின்பற்றாமல், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டங்களை ராணுவ வீரா்கள் அப்பட்டமாக மீறியுள்ளனா் என அதிகாரிகள் கடந்த செப்.18-ஆம் தேதியே தெரிவித்தனா்.

இதுதொடா்பாக போலீஸாரும் விசாரணை மேற்கொண்டனா். உயிரிழந்தவா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு மரபணு சோதனை நடத்தினா். பலியானவா்களின் மரபணுவும் அவா்களது குடும்பத்தினரின் மரபணுவும் பொருந்திப் போவதாக செப்.30-ஆம் தேதி போலீஸாா் அறிவித்தனா்.

இதையடுத்து, மூன்று தொழிலாளா்களின் உடல்கள் அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT