முகப்பு
இந்தியா

ஆப்கனில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

வடக்கு ஆப்கானிஸ்தானின் பரியாப் மாகாணத்தின் குவாஜா சப்ஸ்போஷ் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மோதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று மாகாண காவல்துறையினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

Updated On : 8 அக்டோபர், 2020 at 12:09 PM
8 Afghan militants killed as gun battle erupts in northern Afghanistan.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:04 PM

வடக்கு ஆப்கானிஸ்தானின் பரியாப் மாகாணத்தின் குவாஜா சப்ஸ்போஷ் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மோதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று மாகாண காவல்துறையினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

குவாஜா சப்ஸ்போஷ் மாவட்டத்தின் அனாபிக் கிராமத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் தலிபான் தீவிரவாதிகள் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைத் தாக்கினர். 

காவல்துறையினர் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தினர். 
இந்த சம்பவத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகளை தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது. 

Advertisement

பரியாப் மாகாணத்தின் சில பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் தலிபான் தீவிரவாதிகள் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.