முகப்பு
இந்தியா

தேசிய விமானப்படை தினம்: வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து

இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Updated On : 8 அக்டோபர், 2020 at 9:13 AM
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:04 PM



புதுதில்லி: இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  88 ஆண்டுகால வரலாற்றில் வலிமையான சக்தியாக இந்திய விமானப்படை விளங்குகிறது. விமானப்படை வீரர்கள், வீராங்கனைகளை எண்ணி நாடே பெருமைக்கொள்கிறது.  

விமானப்படையை நவீனமயமாக்குவதன் மூலம் விமானப்படை திறனை மேம்படுத்த உறுதிப்பூண்டுள்ளோம். விமானம் மற்றும் விண்வெளி தொழில்களில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா இடம்பெறுவதே இலக்கு.

Advertisement

நமது வான் எல்லையை விமானப்படை கருத்துடன் பாதுகாத்து வருகிறது என்று தனது வாழ்த்து செய்தியில் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.