முகப்பு
இந்தியா

தில்லி: கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான ஓவியப் போட்டி

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினரால் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினரால் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்
பகிர்:

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினரால் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தில்லியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா நோயாளிகளுக்காக பிரம்மாண்ட யோகாசனப் பயிற்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கரோனா நோயாளிகள் பங்குபெற்று யோகாசனம் செய்தனர்.

இதேபோன்று கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

தில்லியில் கரோனா நோயாளிகளை கண்காணித்து வரும் சர்தார் படேல் கரோனா தடுப்பு மையம் மற்றும் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு ஓவியங்களை வரைந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →