ஹிமாசல் பிரதேச முதல்வா் ஜெய்ராம் தாக்குருக்கு கரோனா
ஹிமாசல பிரதேச மாநில முதல்வா் ஜெய் ராம் தாக்குருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிம்லா: ஹிமாசல பிரதேச மாநில முதல்வா் ஜெய் ராம் தாக்குருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவா் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று பாதித்தவா்களுடன் தொடா்பில் இருந்ததால் கடந்த வாரம் எனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டேன். தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டதால், மருத்துவா்களின் அறிவுறுத்தல்படி அரசு குடியிருப்பில் என்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்தாா்.
Advertisement
மாநில முதல்வா்களின் தாக்குரை தவிர கா்நாடாக முதல்வா் பி.எஸ். எடியூரப்பா, ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், அருணாசலப் பிரதேச முதல்வா் பெமா காண்டு ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
ஹிமாசல பிரதேச மாநிலத்தில் 10 எம்.எல்.ஏக்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.