இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இது குறித்து போலீஸாா் கூறியது:

சோபியான் மாவட்டம் சாகுரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததால் பாதுகாப்பு படையினா் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினா். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா்.

பாதுகாப்பு படையினா் அவா்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். உயிரிழந்த பயங்கரவாதிகள் யாா், எந்த பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது உறுதி செய்யும் பணி நடைபெறுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT