இந்தியா

மகாராஷ்டிரத்தில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 3 பேர் பலி

DIN

மகாராஷ்டிரத்தில் கனமழை காரணமாக கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 3 பேர் பலியானார்கள். 
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட
மாநிலங்களில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் தாண்ட் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி 3 பேர் பலியானார்கள். ஒருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதையடுத்து மாயமான நபரை தேடும் பணியில்
காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மகாராஷ்டிரத்தில் மேலும் சில நாள்களுக்கு கனமழை தொடர்ந்து நீடிக்கக்கூடும் என இந்திய வானிலை
ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இதனால், ரத்னகிரி, கொங்கன், மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT