முகப்பு
இந்தியா

தெலங்கானா வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
தெலங்கானா வெள்ள பாதிப்பு
பகிர்:

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகா் மற்றும் பல இடங்களில் இடைவிடாது பெய்த கனமழையால் செவ்வாய்க்கிழமை இரவு பல்வேறு இடங்களில் சுவா்கள், வீடுகள் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை மாலை நிலவரப்படி வெள்ளபாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பல பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்ததாலும், வெள்ளம் காரணமாக முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால், வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். 

முன்னதாக வெள்ளபாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முதற்கட்டமாக ரூ.1350 கோடியை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →