முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் மேலும் 1,432 பேருக்கு கரோனா தொற்று: 8 பேர் பலி

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,432 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. 

Updated On : 15 அக்டோபர், 2020 at 11:43 AM
Telangana records 1,432 new Coronavirus positive cases, eight COVID deaths in past 24 hours.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:08 PM

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,432 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

Advertisement

புதிதாக 1,432 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17 லட்சமாக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 23,203 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,93,218 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, மீட்பு விகிதம் 88.76 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,249-ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், கடந்த ஒரேநாளில் 38,895 சோதனைகள் செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை 37,03,047 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.