இந்தியா

'மத்தியப்பிரதேசத்தில் நடைபெறுவது மோசடி அரசு': கமல்நாத்

DIN

மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தலைமையில் மோசடி அரசு நடைபெறுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் உஜ்ஜைன் பகுதியில் போதைப்பொருளைக் குடித்து தொழிலாளர்கள் 14 பேர் உயிரிழந்தனர். இது குறித்து முன்னாள் முதல்வர் கமல்நாத் சுட்டுரையில் விமர்சித்துள்ளார். 

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''மத்தியப்பிரதேசத்தில் சிவராஜ் சிங் செளகான் அரசு பொறுப்பேற்றதும் மதுபான மோசடி, கடத்தல் மோசடி, குற்றச்செயல்கள், நில மோசடி, போதைப்பொருள் மோசடி என அனைத்து விதமான மோசடிகளும் மீண்டும் தலைத்தூக்கத்துவங்கியுள்ளன.

மேலும், உஜ்ஜைன் பகுதியில் போதைப்பொருளைக் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், ஜபால்பூர் பகுதியில் 12 வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளார். இதனால் தற்போது குழந்தைகள் கடத்தலும் அதிகரித்துள்ளது'' என்று கமல்நாத் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT