இந்தியா

போபால்: மக்களுக்கான வீதி நிகழ்ச்சி; சாலைகளில் மக்கள் நடனம்

DIN

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 'மக்களுக்கான வீதி' என்ற நிகழ்ச்சியில் முதியவர்கள் உள்பட ஏராளமான சிறுவர்கள் கலந்துகொண்டு நடனமாடியது பலரைக் கவர்ந்தது.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் மக்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் சுற்றுச்சூழலை பேணிப்பாதுகாக்கும் வகையிலும் 'மக்களுக்கான வீதி' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

போபால் ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் தொடங்கப்பட்ட இந்த நிகழச்சி வாரம் தோறும் நடைபெற்று வருகிறது. 

அந்தவகையில் இந்த வாரம் அதிகாலையிலேயே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் திரண்டு உடற்பயிற்சி செய்யும் வகையில் நடனமாடினர்.

மக்களுக்கான வீதி நிகழ்ச்சியின் கீழ் நடனம், ஓவியம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற பல செயல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஒருசில மாணவர்கள் சாலையில் வண்ண வண்ன ஓவியங்களை வரைந்தனர். காலை 9 மணிவரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதியவர்கள் உள்பட மாணவர்கள், குழந்தைகள் என பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT