மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,060 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,060 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:09 PM
மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,060 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 9,060 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 15,95,381 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11,204 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 150 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 13,69,810 பேர் குணமடைந்துள்ளனர், 42,115 பேர் பலியாகியுள்ளனர். 1,82,973 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
அங்கு குணமடைவோர் விகிதம் 85.86 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.64 சதவிகிதமாக உள்ளது.