இந்தியா

ஒடிசாவில் புதிதாக 2,019 பேருக்கு கரோனா

DIN

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,019 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  மேலும் 14 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 2,019 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,68,364-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 22,949 பேர் சிகிச்சைப் பெற்று  வருகின்றனர்.  கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2,44,227-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 14 பேர் உயிரிழந்ததால் மொத்தமாக கரோனாவால் 1,135-ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று (சனிக்கிழமை) மட்டும் 42,258 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 40.43 லட்சமாக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT