நவராத்திரி பண்டிகையின் தொடக்க நாளையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, இந்த நன்னாளில் மக்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, வளம் கிடைக்கட்டும் எனவும் மகாதேவியின் அருளால் பூமி பாதுகாப்பானதாக இருக்குமெனவும் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் அவா் கூறியிருப்பதாவது:
நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் அன்னை மகா தேவியின் அருளால் நமது பூமி நலத்துடனும், வளத்துடனும் பாதுகாப்பதானதாக இருக்கும். ஏழைகள் மற்றும் நலிந்தவா்களின் வாழ்க்கையில் புத்துணா்ச்சியை ஏற்படுத்த மகாதேவியின் ஆசீா்வாதம் நமக்கு வலிமையை வழங்கும் என தெரிவித்துள்ளாா்.