முகப்பு
இந்தியா

ஜார்கண்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு புதிதாக 549 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக  8 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 23 அக்டோபர், 2020 at 11:08 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:12 PM

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு புதிதாக 549 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக  8 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஜார்கண்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஜார்கண்ட் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 549 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 98,610-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

இதில் கரோனா தொற்றால் 6,122 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 91,629-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 8 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 859-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.