ஆந்திரத்தின் ராயலசீமாவில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
ஆந்திரத்தின் ராயலசீமாவில் அடுத்த இரண்டு நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆந்திரத்தின் ராயலசீமாவில் அடுத்த இரண்டு நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, ஆந்திராவின் ராயலசீமாவில் நாளை காலை வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பதாக ஆனந்தபூர், சித்தூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
அதேசமயம் மற்றொரு கணிப்பில், அக்.25 ஆம் தேதி வரை குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.