இந்தியா

பொதுமுடக்கத்திற்குப் பிறகு 2% அதிகரித்த மாருதி சுஸுகியின் வாகன விற்பனை

DIN

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நடப்பாண்டின் 2ஆம் காலாண்டில் வாகன விற்பனையில் நிகர லாபத்தை அடைந்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக நடப்பாண்டின் முதல் காலாண்டில் வாகன விற்பனை பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க தளர்வால் தற்போது வாகன விற்பனை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது.

இந்நிலையில் பிரபல வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுஸுகி வாகன விற்பனையின் மூலம் நடப்பாண்டு 2ஆம் காலாண்டில் ரூ.1419 கோடி நிகர லாபத்தை சந்தித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ.1391 ஆக இருந்தது.

2ஆம் காலாண்டில் 3,93,130 கார்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 16.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT