சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலரஞ்சலி செலுத்தினார்.
சர்தார் வல்லபபாய் படேலின் 145ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தில்லியில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலரஞ்சலி செலுத்தினார்.
இதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் படேலுக்கு மரியாதை செலுத்தினர்.