ஆப்கனில் சாலையோர கண்ணிவெடி தாக்குதல்: 3 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் வியாழக்கிழமை காலை சாலையோர கண்ணிவெடி தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் வியாழக்கிழமை காலை சாலையோர கண்ணிவெடி தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பச்சேரகம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்ணிவெடி சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.