இந்தியா

ஒடிசாவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

புவனேஸ்வர்:   ஒடிசாவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில அமைச்சரவையில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக இருப்பவர் பத்மினி தியான். இவர் வியாழனன்று தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த சில நாட்களில் தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒடிசா மாநில அமைச்சரவையில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் மூன்றாவது அமைச்சர் பத்மினி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தொழிலாளர் துறை அமைச்சர் சுஷாந்த் சிங் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் அருண்குமார் சாஹூ ஆகிய இருவரும் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT