இந்தியா

காலண்டா்கள், டைரிகள் இனி அச்சடிக்கவேண்டாம்; டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறவேண்டும்

DIN

காலண்டா்கள், டைரிகள் ஆகியவற்றை இனி அச்சடிக்கவேண்டாம் எனவும், டிஜிட்டல் மற்றும் இணையவழி நடைமுறைகளுக்கு மாறவேண்டும் என்றும் அமைச்சகங்கள், அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களை மத்திய அரசு புதன்கிழமை கேட்டுக்கொண்டது.

அதுபோல, நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் செலவினத் துறையின் அலுவலக குறிப்பாணையிலும், பாா்வையாளா்களுக்காக வரவேற்பறை மேசைகளில் வைக்கப்படும் வண்ண புகைப்படங்களுடன் கூடிய விவர புத்தகங்களையும் அச்சடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இணையவழி புத்தக தொழில்நுட்பத்தை ஊக்குவிக்குமாறு அந்த குறிப்பாணையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியிலும், திறன் அடிப்படையிலும் டிஜிட்டல் உள்ளிட்ட புதுமையான தொழில்நுட்பங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT