இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 2 தீவிரவாதிகள் கைது

DIN

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஜெயிஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அத்துமீறல் நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த இருவரை கைது செய்தனர். 

மேலும் இருவரும் ஜெயிஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து பயங்கர வெடிமருந்து, ஏ.கே. -47 ரகத் துப்பாக்கி மற்றும் 7 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT