ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஜெயிஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அத்துமீறல் நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த இருவரை கைது செய்தனர்.
மேலும் இருவரும் ஜெயிஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து பயங்கர வெடிமருந்து, ஏ.கே. -47 ரகத் துப்பாக்கி மற்றும் 7 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.