அமைச்சர் இ.பி. ஜெயராஜன் 
இந்தியா

கேரளத்தில் 2-ஆவது அமைச்சருக்கு கரோனா தொற்று

கேரள மாநில தொழில்துறை அமைச்சர் ஜெயராஜனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

கேரள மாநில தொழில்துறை அமைச்சர் ஜெயராஜனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், களப்பணியில் உள்ள பல்வேறு மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இதன்தொடர்ச்சியாக கேரள மாநில தொழில் துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜனுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அவர் கண்ணூர் அருகே பரியாரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கும் கரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. 

முன்னதாக, கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் கரோனா தொற்றால்  பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், நிதி அமைச்சருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா ஆகியோர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT