முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 17,066 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 17,066 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 14 செப்டம்பர், 2020 at 10:11 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 17,066 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 17,066 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,77,374 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15,789 பேர் குணமடைந்துள்ளனர், 257 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,55,850 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 2,91,256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

மும்பை:

மும்பையில் மேலும் 2,256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,71,949 ஆக உயர்ந்துள்ளது. இதில் 31,063 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,32,349 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 8,178 பேர் பலியாகியுள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மேலும் 23 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,938 ஆக உயர்ந்துள்ளது. 2,512 பேர் ஏற்கெனவே குணமடைந்ததையடுத்து, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 156 ஆகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.