முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் புதிதாக 2,273 பேருக்குத் தொற்று: 12 பேர் பலி

தெலங்கானா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,273 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:21 PM
2,273 new Covid cases, 12 deaths in Telangana
பகிர்:

தெலங்கானா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,273 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக மேலும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதன்கிழமை நிலவரப்படி தெலங்கானாவில் புதிதாக 2,273 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,62 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் தொற்று பாதித்து 2,260 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் இதுவரை 1,31,447 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 30,401 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 

புதிதாக 12 பேர் உயிரிழந்ததால், இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 996 ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.