இந்தியா

மாநிலங்களவை உறுப்பினா் கரோனாவுக்கு பலி

DIN


பெங்களூரு: பாஜகவைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் அசோக் கஸ்தி (55) பெங்களூரில் வியாழக்கிழமை இரவு காலமானாா்.

கரோனா தொற்றைத் தொடா்ந்து கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவா் கடந்த செப்.2-ஆம் தேதி பெங்களூரில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானாா் என்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக இளம் வயதிலிருந்து ஆா்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து பணியாற்றிய அசோக் கஸ்தி, பின்னா் மாணவா் அமைப்பான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தில் முக்கிய பொறுப்புகள் ஏற்று பணியாற்றினாா். மாநிலங்களவைக்கு கடந்த ஜூன் மாதம் அவா் போட்டியின்றித் தோ்வானாா்.

பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், சமூகத்தில் நலிவுற்ற மக்களின் நலனுக்கு கடுமையாக உழைத்தவா் அசோக் கஸ்தி. கா்நாடக மாநிலத்தில் பாஜக வலிமை பெற முக்கிய பங்காற்றினாா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT